egsisi

No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271

egsita

பாடசாலை செயலமர்வு

பதுளை மற்றும் பண்டாரவளை மாவட்டங்களில் ஒக்ரோபர் 17 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டு மற்றும் 18 ஆம் 2019 ஆண்டு இடம்பெற்ற செயலமர்வு

பாடசாலை செயலமர்வு ஒக்ரோபர் 17 ஆம் திகதி 2019

பதுளை மற்றும் பண்டாரவளை மாவட்ட கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலைகளில் 2019 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக பயிற்சி பட்டறைகள் நடாத்தப்பட்டன.

குறித்த செயலமர்வுகள் பதுளை மாநகரசபை கலையரங்கம் மற்றும் தர்மசோக கல்லூரி பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றன. ஊடக எழுத்தறிவு மற்றும் பொழுதுபோக்கு எனும் தலைப்பில் இடம்பெற்ற பயிற்சி பட்டறையில் பல வலயக்கல்வி பிரிவுகளிலிருந்து  கிட்டதட்ட 800 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இநத செயலமர்வில் களனி பல்கலைக்கழக  விரிவுரையாளர்கள் மற்றும் கட்புல கலையரங்க முன்னாள் பீடாதிபதி ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றியிருந்தனர். பயிற்சி பட்டறையில் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் இடமபெற்றன.

பதுளை மாவட்ட பிரதேச செயலாளர் பேரவையின் தலைவர், பேரவை ஆணையாளர், வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். மேலும் பேரவையின் பதில் ஆணையாளர், கணக்கதிகாரி, மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோரும் செயலமர்வில் இணைந்திருந்தனர். செயலமர்வின் இறுதியில் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பேரவையினால் பாடசாலை நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Image