egsisi

No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271

egsita

ஊடகசெயலமர்வு திருகோணமலையில் (10.08.2019)

இலங்கை பத்திரிகை பேரவையினால் முன்னெடுக்கப்படும் செயலமர்வின் தொர்ச்சியாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் உள்ளடக்கி 10 ஓகஸ்ட் 2019 அன்று திருகோணமலை ஜேகேஎபி விடுதியில் பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.


இந்த பயிற்சி பட்டறை நிகழ்வில் திருகோமலை மாவட்ட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறையை சேர்ந்த பெருமளவிலான ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வின் பிரதான தொனிப்பொருளாக முரண்பாட்டு அறிக்கையிடலும் மற்றும் ஊடகவியலாளர்களின் வகிபாகமும் அமைந்திருந்தது.

இந்த பயிற்சி பட்டறையை களனிப்பல்கலைக்கழக பொதுசன ஊடகத்துறையின் தலைவரும் மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு.அருண லொக்குலியன, சிரேஷ்ட விரிவரையாளர் விஜயானந்த ரூபசிங்க மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் செந்தில்வேலவர் ஆகியோர் வழிப்படுத்தியிருந்தனர். இந்த பயிற்சி பட்டறை கலந்துரையாடல் மற்றும் உரையாடல் மூலம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட உதவிப்பிரதேச செயலாளர், பேரவையின் தலைவர், பேரவை உறுப்பினர்கள், பேரவை ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

மேலும் திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் மொழியியல் துறையின் தலைவர் கலாநிதி நவீன் ராஜ் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் பயிற்சி பட்டறையில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Image